என் செல்பேசியுடனான காதல்

உன்னை பார்த்த போதே
காதலிக்க தொடங்கியவள் நான்…
உன் சினுங்கல்களை கண்டு
ரசித்தவள் நான்...
உன் உருவம் கண்டு
உணர்ந்தவள் நான்…

நான் தொடும் பரிசத்திற்காகவே
காத்திருப்பாய்-நீ
தினமும் ஒருமுறையாவது
காதோரம் முத்தமிடுவாய்…
உன்னிடம் தினம் பேசவில்லை
என கோபிப்பாய்…
நீ பேசாத நேரங்களில்
நான் அமைதியாவேன்..
காரணம் நானென
கவி சொல்வாய்…

மொத்தத்தில்
என்னுயிர் மூச்சாகி போனாய்…
என் மூச்சு நிற்கும் தருணம்
நீயெப்படிருப்பாயென தெரியாது ...

நீயிருக்கும் போதே
உன்னுடன் பேசிக்கொள்கிறேன்…
உன்னுடன் சண்டையிட்டுக் கொள்கிறேன்…

சில நாட்கள் நீ
என் வாழ்வில் இல்லாமலும் போகலாம்…

நீயில்லா நேரங்கள்
கலைந்து போகும் காற்றை போல
நானாகிறேன்…

எழுதியவர் : இலக்கியா (8-Mar-18, 10:05 am)
பார்வை : 181

மேலே