முறைதானா கானகமே

மலைத்தாயே
ஏனிந்த கோபம்?

உன்திருமேனியில்
துளையிட
எண்ணியோரெல்லாம்
ஒய்யாரமாய்
இருக்கும்போது
ஒன்றுமறியா
அப்பாவிகள் மீது
அனல் கக்கியது ஏன்?

இராட்சத இயந்திரங்கள்
கொண்டுன்னை
தீண்டியவனைக்கூட
தீண்டியதில்லையே நீ....
மஞ்சள்சரடு கூடக்காயாத
இளஞ்ஜோடிகளை
தீக்கரம் கொண்டு
ஏன் தீண்டினாய்

எங்கிருந்தோ வந்துன்
மடி சேர்ந்தோரை இறைவ
னடி சேர்த்தாயே....
அவர்களை
காட்டுத்தீ வளைத்ததா
கர்மத்தீ அழைத்ததா????

வாஞ்சையோடுதானே
வந்தார்கள்
வஞ்சனையேன்
செய்தாய் வனமே!!!!?????

எழுதியவர் : முகில் (13-Mar-18, 12:39 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 101

மேலே