துளியே துளிரே

துளியே...! துளிரே...!

மெளன –
அதிர்வின்...
மணித்திரள் முடிப்பே...!

இமைகளின்
பிரிவினில்...
இளகிடும் மதியே...!

வெண் –
விழி முகில்கள்...
விதைத்த மழையே...!

இதயம் வருடி
இறகுயென உகுந்த...
கண்ணீர் பூவே....!

அஞ்சன –
குயில்களின்
அமுத கானமே...!

நெஞ்சகம்
கோதி யோடிடும்
நெய்தல் தாரையே...!

உணர்வு
உறைய வூறும்
உணர்ச்சி துளியே...!

மானுட
தளிர்தன்
மாதவத் துளிரே...!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (14-Mar-18, 10:38 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 59

மேலே