அமைதி

எல்லாம் இருந்தும் மனதில்
அமைதி இல்லை - சரி
இமயம் சென்று தனிமையில்
அங்கு ஏதாவது ஓர் இடத்தில்
தவமிருக்கலாம் அமைதிபெற
என்று சென்றவன்- இடையில்
தனிவழியில் ஒரு சிறுவனைக்
கண்டான், இத்தனிவழியில்
பாலகனே எங்கு செல்கிறாய்
என்று இவன் கேட்க , மழலைத்ததும்ப
பாலகன் " போகும் இடம் தெரியவில்லை
என்றான்" பாலகன் மழலையில்
இவனுக்கு மனம் அமைதி சேர
இமயம் போகாது வீடு திரும்பினான்
பாலகனோடு அவனுக்கு போகும்
இடம் காட்ட அவனோடு சேர்ந்து வாழ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Mar-18, 9:16 am)
Tanglish : amaithi
பார்வை : 125

மேலே