தவிக்கும் மனசு
புரிந்தும்
புரியாமலும்
தவிக்குது மனசு
ஏன் என்று
கேட்டு விட
துடிக்குது மனசு
தெரிந்தும்
விலகிட தோணுது
மனசு ..
விலகிட்டாலும்
நெருங்கிட தோணுது
மனசு..
பேசிவிட்ட
வார்த்தைகளையே
நெனைக்குது மனசு...
நீ பேசாத
மௌனங்களையும்
நெனைக்குது மனசு..
அருகினில்
இருக்கும்போது
சண்டை போட
நினைச்ச மனசு..
நொடி கூட
உன்னை காணாமல்
தேடுது மனசு ..
ஏண்டா
தவிக்க விடுறனு
கேட்டிட தான்
தோணுது மனசு ..
எதையோ
சொல்லிட
தவிக்குது மனசு..
பக்கத்துல தா
நீயும் வந்தா
ஊமையாகி நிக்குது
மனசு ..
புரிஞ்சும் புரியாமலு
தவிக்குது என் மனசு ..