காட்சியும் கூறுதன்றோ

சிதறிய சிந்தையால்
சிந்திடும் தண்ணீரும்
சாய்ந்த குடங்களால்
நனைகின்ற ஆடையும்
கன்னியின் கவனத்தில்
​கடுகளவும் கொள்ளாத
​காரணமும் என்னவோ ...

​வழிகின்ற காட்சியும்
​விழிகளால் காணாத
எழிலவளின் எண்ணமும்
எத்திசையில் உள்ளதோ
​கன்னியவளின் மனமும்
​கடல்கடந்து சென்றதோ
சுந்தரியின் நெஞ்சமும்
​சுந்தரனை நினைக்குதோ ...

​போதையில் இருந்தாலும்
பாதையில் நடைபயணம்
கோதையின் நிலையிதை
​கோடிட்டுக் காட்டினேன் ​
​காதலிக்கும் இதயங்கள் ​
​கனவிலே மிதப்பதுவும் ​
​காலநேரம் இல்லையென
காட்சியும் கூறுதன்றோ !!!!!​

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Mar-18, 9:45 am)
பார்வை : 210

மேலே