மலராத நினைவுகள் இறுதி பாகம்

மலராத நினைவுகள் இறுதி பாகம்
.மறுநாள் காலை போன் பண்ணினேன் ஆப் ஆகி இருந்தது சரி ஆஸ்பிட்டல் போயிருப்பானு நினைத்தேன்
நேரம் ஆகியது போன் வரல என்னாச்சி இவளுக்கு
மனதில் இனம்புரியா வலி
மாலை ஆனது இரவாச்சி எந்த அழைப்பும் இல்லை

மறுநாளும் அதே நிலை
என்ன செய்ய அவள் தோழி நம்பர் எப்போதோ தந்தது நினைவு வர தேடி எடுத்து அழைத்தேன்

அவள் தோழி எடுத்தா

அவள எங்கம்மா..

அண்ணா அவா நம்மள விட்டு போயிட்டா..னா
சொல்லியபடி அவள் அழ
வானம் இடிந்து தலையில் விழுந்ததாய் உணர்ந்தேன்
அதன் பின் சுய நினைவு வந்தவனாய் விபரம் கேட்டேன் இரவு திடீரென முடியாம போய் ஆஸ்பிட்டல் போறவழியில் உயிர் போயிட்டு....அவங்க வீட்ல இருந்து வந்து கொண்டு போயிட்டாங்க..னா

உள்ளம் உடைந்து
ஊமையாய் அழுதேன்
இரவில் உருகி உருகி நேசித்தவள் பகலில் சாம்பலாகி போளாள்

..

அவள் நினைவில்லாத
தினங்கள் இல்லை
ஆனாலும்
இன்று அவள் நினைவு தினம்... ..........

எழுதியவர் : இ.பாலாதேவி (21-Mar-18, 12:39 pm)
பார்வை : 130

மேலே