வெறும் நினைவுகளுடன் இவன்

என் கனவென வந்தாயே
சொல்லாமல் இதயத்தில் புகுந்தாயே
நெஞ்சொடு கொஞ்சிப் பேசி
என்னை உயிரோடு கொன்றாயே ..!!

ஜென்மம் ஏழு இனி நான் எடுத்தாலும்
சேயை போல
என்னை தாங்க உன்னைப்போல் ஓர்
தாயை நானும் காண்பேனோ ??!!

உந்தன் (ப)வாசத்தால்
இந்த நாரை மனமாக்கினாய்
காட்டாத பாசம் காட்டி- ஏனோ
விட்டு விலகி பிணமாக்கினாய் !!

சில கணம் பூத்து உதிர்ந்த பூவை
தாங்கிய செடி போல்
வெறும் நினைவுகளுடன்
நரகமாய் நகரும் நாட்களுடன் .....

என்றும் ...என்றென்றும் ...
ஜீவன்

எழுதியவர் : ஜீவன் (24-Mar-18, 6:12 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 673

மேலே