முடிவுதான் ​தெரியவில்லை

-​----------------------------------------------

ஓயாத போராட்டங்கள்
ஒழிகவென கோஷங்கள்
​முற்றுப்பெறா பிரச்சினைகள் ​
முடிவுதான் ​தெரியவில்லை !

ஆறாத இரணங்களை
ஆற்றிட வழியறியாது
மாறாத நெஞ்சங்களால்
​மாற்றமும் நிகழவில்லை !

நீர்த்​திட்ட ​நிர்வாகம்
நீங்காமல் இருப்பதுவும்
வேடிக்கை ​பார்ப்பதுவும்
வாடிக்கை​ ஆனதிங்கு !

மவுனம் காப்பதாலே
மவுசும் கூடுமென்று
தப்பான கணக்கிலே
தள்ளாடும் அரசுமிங்கு !

அரைவயிறும் நிரம்பிட
அளவின்றி உழைத்திடும்
​மழலைச் செல்வங்களால் ​
​மனதும் வலிக்குது !

ஒருவருக்கே குடும்பத்தில்
ஒருவேளை உணவில்லை ​
​பகல்வேஷம் தரிப்போர்க்கு ​
​பயமேது உணர்ந்திடுவீர் !​

​தேய்கிறது தமிழகமும் ​
​தேறிடுமா நம் வாழ்வும் !
தெளிவில்லா எதிர்காலம்
தெரிகிறது என் நெஞ்சில் !

பழனி குமார்
27.03.2018

எழுதியவர் : பழனி குமார் (27-Mar-18, 3:44 pm)
பார்வை : 591

மேலே