முதுமொழிக் காஞ்சி 53

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வாய்ப்புடை விழைச்சி னல்விழைச் சில்லை. 3
(வாய்ப்புடை வழக்கின் நல் வழக்கு இல்லை)

- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மக்கட்பேறு வாய்த்த கலவிபோலும் கலவியின் நல்ல தில்லை.

பதவுரை:

வாய்ப்பு உடை (ய) - மக்கட்பேறு வாய்த்த,

விழைச்சின் - இணைவிழைச்சு (கலவி) போல்,

நல் விழைச்சு இல்லை -கலவியின் நல்ல தில்லை.

'வாய்ப்புடை வழக்கின் நல்வழக்கில்லை' என்ற பாடம் கொண்டு, சாட்சி முதலியன வாய்த்துள்ள வழக்கைக் காட்டிலும் நல்ல வழக்கு வேறில்லை என்றும் உரைப்பார்.

வாய்ப்பு - பேறு, விழைச்சு - இணைவிழைச்சு - கலவி.

புத்திர பாக்கியம் பெறுதலான கலவியே கலவி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-18, 3:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே