போதாதடி

கருமை நிற நீர்வீழ்ச்சியாய் உன் கூந்தல்
அதில் நீ சூடிக் கொள்ளும் மல்லிகை
இவ்வழகைக் காண கண்கள் இரண்டு போதாதடி!!

உன் வரவை அறிவிக்கும் உன் கொலுசின் மணிகள்
அவ்வோசையும் ஒரு இசை அல்லவோ!
அதை கேட்க​ என் செவி இரண்டும் போதாதடி!!

நீ அணிந்ததால் மகிழ்ந்து கூத்தாடும்
காதணிகளும் மோட்சம் பெற்றன
உன் கண்ணம் உரசிய​ புண்ணியத்தால்!!

கதிரவனுக்கும் கண் கூசுமடி
உன் மூக்குத்தியின் ஒளி பட்டால்!!

உன் கைகளில் தாளமிடும் வளவியாய்
மாறிட வரம் கொடுப்பாயோ எனக்கு?!

விழி இரண்டில் மை வைத்து அழகாய்
பேருந்தை எதிர்நோக்கி காத்திருக்கும் உன்னை
விழிநேரில் பார்க்க​ இயலாமல்
நான் தவிக்கும் தவிப்பை சொல்ல
இவ்வுலக​ மொழிகள் போதாதடி!!

எழுதியவர் : பூர்ணி கவி (30-Mar-18, 6:05 pm)
பார்வை : 245

மேலே