வேலு நாச்சியார்

விதையாக பிறப்பின்
முளையிட்டு எழுவேன்..
பகையாக இருப்பின்
போர்க் கொண்டு வெல்வேன்..
என் தசையோடு கண்படின்
உன் உயிரதனை கொய்வேன்..
எட்டு திசையெங்கும்
மார்தட்டிச் சொல்வேன்..
நான் வீர தமிழச்சி டா!

சிதைவேனோ! வீழ்வேனோ!
எமன் வசைப் பாட,
எலும்புகள் எருவாக,
எழுந்தருள்வேன் தீ் பிழம்பாக
திரியிட்டு காத்திடுவாய்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (4-Apr-18, 9:05 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 6678

மேலே