காதலே

உன்னை கண்ட நாள் முதல்
காதல் பூத்திருந்தேன்..
காதலும் காற்றும் ஒண்றடா
நம்மை தழுவும் வரை புரியாத உணர்வு..
தினம் தினம் பேசிய நிமிடங்கள்
பேசாமல் இருக்க நொடிகளும்
யுகங்களாய் மாறின..
பேச நினைத்த வார்த்தைகள் பல
உன்னை காணும் வரை..
உன் விழி காணயில்
உலகம் மறந்தேன்
வார்த்தை மறந்ததில் வியப்பபென்னவோ ..??
செல்லும் பாதை தூரமாகத
என்று ஏங்கியது கால்கள்
உன்னோடு நடக்கையில்..
பூவின் தேனை கண்ட வண்டு போல்
உன் வாசம் உணர்ந்து பிதற்றியே
சுற்றினேன் உன்னை..!!
கார்மேகம் சூழ்ந்த இருளில்
என் மார்பு கூட்டினில்
உன் இமை புதைந்து கிடக்காத
என்று ஏங்கியது இதயம்..
மூன்டோர் மூடிபோட்டு
வளம் வந்தோம் அக்னியை
என் வளத்தின் பலமாய்
நீ இருப்பாய் என்று
என் காதலே...!!!

எழுதியவர் : தா ....ரா...(தாரணி ராஜாராம்) (7-Apr-18, 7:38 pm)
Tanglish : kaathale
பார்வை : 291

மேலே