காயசண்டிகர்

அந்திச் சூரியனாய்
குளிரச் சிரித்த
திண் தமிழன்...
பசித்து போனான்.
ஆவல் பசித்தது
மனம் பசித்தது.
பார்த்தது எல்லாம்
அவனுக்கு பசித்தது.
காமம் பசித்தது.
கனவுகள் பசித்தது.
பசிக்க பசிக்க
புசிக்க தவித்தவனின்
வெறி பசித்தது
ஆணவம் பசித்தது.
நாணம் மறந்து
கோணல் ஆனான்.
அறிவதில் பசித்த
கேட்பதில் பசித்த
தெளிவதில் பசித்த
பச்சை தமிழன்
போதையில் பசித்தான்.
பசித்தவன் ஆவி
கோடைத்தணலாய்
குமுறித்தவிக்க
வாக்களித்து
வாக்களித்து
பசிக்கும் தமிழனை
செரித்தது மரணம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Apr-18, 5:59 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 435

மேலே