பாஸ் நாங்க பயந்துட்டோம்

தமிழ் அமைப்புகளே
விட்டுவிடுங்கள்...
உமது போர்குணத்தில்
நீராவியாவது எதுமறியா
எங்களின் செல்ல
விசிலடிச்சான் குஞ்சுகளே...
பாவம் அவர்கள்
வீர வசனங்கள் கேட்டு
தினவு கொண்ட தோளுடன்
வீதியில் திரிகின்றனர்.
கோப்பையும் கொள்கையுமாய்..
வீட்டில் ஒட்டடை
அடிக்க ஆள் இல்லை.
வசனம் கேட்டு கேட்டு
நாங்கள்
வாழ்ந்து கேட்டது போதாதா?
ஊருக்கு நான்கு பேர்(?)
இருக்கும் நீங்கள்
ஊதி விடும்
கற்பனை பயங்கரத்தில்
ஓடி ஓடி அலைகின்றனர்
வாழ்வும் வக்குமின்றி...
கோமணத்தில் இருந்து
பாண்ட்க்கு மாறவே
ஓடிபோனது 70 வருடம்.
போகும் போக்கில்
கோமணமாவது மிஞ்சட்டும்.
உங்கள் ஆசைக்கு
சொல்லி விடுகிறோம்
பாஸ்...நாங்க
பயந்துட்டோம்
உங்களை பார்த்து
போதுமா???😱😱
விட்டுவிடுங்கள்
எம் தமிழர்களை...
நேற்று வந்த
உங்களை நம்பியல்ல...
தமிழ் தானே பிழைக்கும்.
நாங்கள் எப்படியும்
பிழைத்துக்கொள்வோம்
அயலகம் சென்று
ஆவி சிந்தி வாழ்ந்து
பூமி வியந்த
பெருமை எமக்குரியது
உன் தாத்தன்
பிறக்கும் முன்பே.

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Apr-18, 11:57 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 286

மேலே