சித்திரைப் பாவையே வருக

சித்திரைப் பாவையே வருக !


இன்று
எட்டுத் திக்கிலும்
சித்திரைப் பாவையே உந்தன்
முத்திரை முகம் தோன்றுகிறதே !

இன்று
நோக்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நேசக்கரம் நீட்டுகிறதே !

இன்று
கேட்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மனிதநேயம் ஒலிக்கிறதே !

இன்று
தீண்டுமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மலரின் மென்மை உணரப்படுகிறதே !

இன்று
பேசுமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
சீரும் சிறப்பும் பேசப்படுகிறதே !

இன்று
நுகருமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மலர் மணம் பரப்புகிறதே !

இன்று
வணங்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
தெய்வ அருள் கிட்டுகிறதே !

இன்று
காலைத் துயிலெழுந்து
நாட்காட்டியைப் பார்த்தால்
பங்குனித்திங்கள் பெற்ற
சித்திரைப்பாவையே உந்தன்
முத்திரை பதித்த
முகம் தெரிகிறதே !

உலகில்
சத்தியம் தர்மம் மனிதநேயம்
நித்தியம் வளர
சித்திரைப்பாவையின்
சிரித்த முகம் பார்த்து
உள்ளம் மகிழ்ந்து
வணங்கி வரவேற்போம் !

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (14-Apr-18, 8:42 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 44

மேலே