விளம்பிக்கு நீ ஒரு வாக்கு தந்தால்,அவள் தந்திடுவாள் அத்தனையும் உனக்கு

விளம்பி வந்தாள்
நன்மைகள் அள்ளி அள்ளி
நமக்கு தந்திட -ஆயின்
வரன்கள் தந்திடும் முன்
நம்மிடம் ஒரு கேள்வியும் விடுத்தாள்
"நலம் அத்தனையும் கிட்டிடும் மானிடரே
ஆனால் எனக்கோர் வாக்கும் நீங்கள்
தந்திடல் வேண்டும் அதற்க்கு முன்பு,
இன்று முதல் வன்மம் அத்தனையும்
களைந்து விட்டு, அமைதியை நாடிவிடு
அத்தனை துயரையும் அகற்றிடலாம்
தீர்க்க சிந்தனையால் , ஆவேசம் தவிர்த்து,
பிரச்சனைகள் எத்தனை வந்தாலும்
போர்க்கொடி எடுத்து வீதிக்கு வருதல் தவிர்க்க
வன்முறையில் சேதங்கள் செய்வது விடுத்து
அமைதி முறையில் போராடு,வெற்றி உனக்கே
அது தாமதமாய் வந்தாலும் ; சரி, சரி,
காலம் தாழ்த்திடாதே, இன்றே எனக்கு
வாக்களித்து, செயலில் இறங்கு, வெற்றி உனக்கே
பாதையை நான் தெளிவுபடுத்துவேன் ,உந்தன்
எண்ணங்கள், நல்லெண்ணங்களை அத்தனையும்
இனிதாய் ஈடேற" என்றாள், விளம்பி அம்மன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-18, 6:52 am)
பார்வை : 54

மேலே