நிலவுடன் ஓர் நேர் காணல்

நிலவே வளர்வதேன் ?

தேய்வதற்காக !

தேய்வதேன் ?

வளர்வதற்காக !

வேடிக்கையான பதில் !!
ஒரு நாள் இல்லாமல் போய்விடுகிறாயே
அது ஏன் ?

ஆதவனைக் கேள் !

ம்ம் ..குளிர்ச்சி தருவதேன் ?

சூரியன் உஷ்ணம்
நான் A / C

நைஸ் ஆன்ஸர் !
காதலை ஆதரிப்பது ஏன் ?

காதலர்கள் அந்திப் பொழுதில் வருவதால் !

புரிய வில்லை !

அந்தியில் ஆதவன் மறைந்த பின் என்னை
சந்திக்க வருவதால் !

சூரியனை விட்டு சந்திரனைச் சந்திக்க வருவதால் ...
புரிந்தது !

கவிஞனை ஆதரிப்பது ...?

காதலர்கள் இளமை கடந்ததும் என்னை மறந்து விடுவார்கள் .
கவிஞர்கள் இதயம் என்றும் இளமையானது . என்னை மறக்கமாட்டார்கள் .
அந்தக் கவின் மனதில் நினைவின் நிலாவாக நான் என்றும் உலா வருவேன்
என்று கண் சிமிட்டினாள் நிலாத் தோழி !

ஆஹா ஆனந்தம் THANK Q டியர் டயானா !

எழுதியவர் : கவின் சாரலன் (6-May-18, 8:44 pm)
பார்வை : 67

மேலே