விலகா வலிகள்

விலகா வலிகள்"
***********************

காதலில்
உணர்வுகளை சாகடிப்பார்கள்,,
நீ கொஞ்சம்
கருணையாளி
கொல்லாமல் மழுங்கடிக்கிறாய்!!!

பிறர் விழியோரம் நீரைக்கண்டால் பதறிப்போகும் நீ,
என் மனதோரம்
இரத்தம் கசிவதை
இயல்பாய் கடக்கிறாய்!!!!

தொலை தூரப் பயணத்திற்கு எடுத்துச்செல்லும் கட்டுச்சோறு போல்
என் நிம்மதியும் கட்டிச்சென்றாய்!!!

கண்டெடுத்த கவிதை ஒன்றை கண்கலங்க வாசித்து எழுதிக்கொண்டிருந்த கவிதையை
ஈரமாக்கி அழித்தாய்!!!

உன்னோடு விழித்திருந்த இரவுகளெல்லாம்,
இதோ
உன்னால் விழித்தழுகிறது!!!

அழுது அழுக்கான
என் உணர்வுகளை
அமிலத்தில் முக்கி
சலவை செய்கிறாய்!!!!

கர்ணனைத் துளைத்த கதண்டாய் எனைத் துளைப்பதை விடுத்து கருணைக்கொலை
செய்திடு....
எத்திசையும்
கிழக்கில்லை
இனி எனக்கு!!!

தேவக்குமாரனின்
இறுதி கேள்வி மட்டுமல்ல... பல தேவி குமாரன்களின் கேள்வியும் இதுவே.......

"ஏன் என்னை
கைவிட்டிர்????"

எழுதியவர் : இ.பாலா தேவி (10-May-18, 12:35 pm)
சேர்த்தது : இ பாலாதேவி
Tanglish : vilakaa valikal
பார்வை : 97

மேலே