மரணம்

நினைவில் வந்து மறைந்துபோகும்
மாயை போல்....
காணாமல் போகின்றோம்..!
எத்தனை ஆசைகள்..எத்தனை கனவுகள்...எத்தனை வலிகள்...
எல்லாம் எங்கே...
நாளை என்று நாம் ஒதுக்கிய
அந்த நாளை எங்கே....
இதுவரை வேண்டிய...
அயர்ந்த தூக்கம்
எந்த துக்கமுமில்லாமல்...
ஏங்கிய அன்பு
எந்த ஏமாற்றமுமில்லாமல்...
எல்லா புகழும்
எந்த இகழ்ச்சியுமில்லாமல்...

நம் பற்றி சிந்தனை இல்லாதவர்க்குக்கூட அன்று
முழுதும் நம் சிந்தனையே...
நம்மை போன்றே இனி அயர்ந்து
உறங்கும் நம் பொருளும்...
நம் கைபேசி இனி யார் கையிலோ...
மடிக்கணினி யார் மடியிலோ...
தூக்கிச் செல்லயில் துக்கம்
அடைகிறது..எல்லோருக்கும்....
நிம்மதியாய் உறங்குகின்றோம்
நாம் ஆறடி நிலத்திற்கு
சொந்தக்காரர் என்று....

எழுதியவர் : ரேஷ்மா (10-May-18, 7:23 pm)
Tanglish : maranam
பார்வை : 294

மேலே