புகார் ----ஒரு புது அணுகு முறை


புகார் கொடுக்க வரிசையில்
நின்றனர்
பெரியவர் முறை வந்தது
என்ன கொண்டு வந்த்ருக்கிறாய் ?
புகார்
வேறு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?
ஒன்றும் இல்லை.
நாளை வா நெக்ஸ்ட்
வரிசையின் கடைசியில் ஒருவர்
காகிதத்தின் கீழ் கரன்சி வைக்கவேண்டும்
தெரியாதா ?
நாளை வருகிறேன் என்றார் பெரியவர்

மறு நாள் பெரியவர் முறை வந்தது
என்ன கொண்டு வந்திருக்கிறாய் ?
புகார்
வேறு என்ன கொண்டு வந்திருக்கிறாய் ?
பெரியவர் எடுத்துக் காட்டினார்
என்ன சவுக்கு
எதற்கு ?
கொடுப்பதற்குத்தான்
நாற்காலி காலி
புதிய நியமனத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-11, 7:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 403

மேலே