எங்கு சென்றாய் நீ

எங்கு சென்றாய் நீ?
எட்டிநின்று தொட்டுணர்ந்து
பட்டும் படாமலே
பட்டாம்பூச்சாய்
சுற்றி சுற்றி வந்து நிற்பாய்
செல்லக் கோபங்களில்
சில மணிகள் சிலாபிப்பாய்
மெல்ல நீ வந்தென்னை
முத்தமிட்டு முனகிடுவாய்
இன்று நீயும் எங்கு சென்றாயடி?
புதுச்சேலை அணிந்து நின்று
புதுனந்தான் காட்டையிலே
பின்னிருந்து விண்ணப்பம்
பிணைந்து நின்று உனை இழுக்கும்.
சேலைகளில் வெறும் வாசம்
வெறிச்சோடி கிடைக்கையிலே
தனிமரமாய் நீ மட்டும்
எங்கு சென்றாயடி?
காலன் உன்னை இழுக்கையிலே
கணவன் உண்டு
கடமை உண்டு என்றழுது
கால்களிலும் விழுந்திருப்பாய்.
முடியவில்லை உனக்கு
துயர் தாளவில்லை எனக்கு.
பாதையொன்று காட்டுமம்மா
பக்கத்தில் நானும் நிற்க
ஒருக்காலும் முடியவில்லை
உனை மறந்து இங்கிருக்க.