437 நிலைத்த இன்பம் நீளுலகில் இல்லை – துன்பம் 3

கலி விருத்தம்

கோடிபொன் னுடையவ ரெனினுங் கோமுடி
சூடிய வேந்தரே யெனினுந் துன்பொடுங்
கூடிய வாழ்க்கைய ரன்றிக் கூறுங்கால்
நீடிய சுகமுளோர் நிலத்தி னில்லையே. 3

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

“அளவில்லாத செல்வத்தை உடையவர் ஆனாலும், மணிமுடி சூடிய மன்னரே ஆனாலும் துன்பத்துடன் கூடிய வாழ்க்கையராவர். அதை விடுத்து சொல்லப் போனால், நீண்ட இன்பமுள்ளவர் இந்நிலத்தில் ஒருவரும் இல்லையே” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
கோடி – அளவில்லாத, கோமுடி - மன்னன் சூடும் மணிமுடி, நீடிய - நிலைத்த
நிலம் - உலகம்.

பொருளுரை:

“அளவில்லாத செல்வத்தை உடையவர் ஆனாலும், மணிமுடி சூடிய மன்னரே ஆனாலும் துன்பத்துடன் கூடிய வாழ்க்கையராவர்.

அதை விடுத்து சொல்லப் போனால், நீண்ட இன்ப முள்ளவர் இந்நிலத்தில் ஒருவரும் இல்லையே” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
கோடி - அளவில்லாத.
கோமுடி - மன்னன் சூடும் மணிமுடி.
நீடிய - நிலைத்த.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-18, 9:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே