முதுமொழிக் காஞ்சி 66

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
உறுவினை காய்வோன் உயர்வுவேண்டல் பொய். 6

- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மிக்க கருமம் செய்வதற்கு வெறுத்து சோம்பேறியாயிருப்போன் தனக்கு உயர்வும், மேன்மையும் வேண்டுவது பொய்யாகும்.

'தக்க கருமம்' - பிரதிபேதம்

(ப-ரை.) உறுவினை - மிக்க கருமத்தை, காய்வோன் - செய்யாமல் வெறுப்பவன், உயர்வு வேண்டல் - மேன்மையடைய விரும்புதல், பொய் - பொய்யாம்.

ஆக்கம் - மேன்மேல் உயர்தல்.

உறுவினை என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, பயன் பெறுதலான காரியம், கைகூடத்தக்க காரியம் என உரைப்பதும் பொருந்தும்.

'உறுவினைக்(கு) அயர்வோன்.' - பாட பேதம் (அயர்வு - சோர்வு)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-May-18, 10:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே