இவள்

செங்குருதி பீறிற்று
புடை நரம்பில் முறுக்கேறி
அண்டம் அறிய அலறலில்
அவளில்லா தவிப்பிலலைகிறேன்..
அழகு மயிலில் ஆணழகெனினும்
இவளினழகில் அடங்கிப்போனோனை
பார்ப்பவன் பைத்தியக்காரனென்றான்,
பேசியவன் பேதகனென்றான்...
கூக்குரலிட்டும் கைசைகையிட்டும்
வாவென்றாலும் வராத கல்நெஞ்சமோ அல்ல இவள் கட்டுப்பட்ட நெஞ்சமோ...

எழுதியவர் : Abu (21-May-18, 4:03 pm)
சேர்த்தது : அபு
பார்வை : 89

மேலே