அபு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அபு |
இடம் | : |
பிறந்த தேதி | : 03-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 13 |
என்னை புரிந்து
கொண்டவர்களை தவிர,
சிலரால் தூக்கி எறியப்பட்டவன் நான் ..
ஆதலால் தூரத்தில்
தொலைந்தவன் அல்ல ...
துடித்தெழுவேன் நான்
விடியும்போது விமர்சிக்கும் தோழனே
முடியுமென்று முயற்சி எடு...
வெட்கவேதனைகளை சுமந்துக்கொண்டே செல்ல
நீ பொதி பிராணி அல்ல...
விழித்துக்கொள்...
நினைத்துக்கொள்..
இது உன்னுடைய வாழ்க்கையே...
வேண்டுமென்றாலும்
வேண்டாமென்றாலும் வாழும் வாழ்க்கையோ உன்னிடத்தில் ...
வேசம்போட்டு பாசமிட்டு தடைபோடும்
இவ்வுலகத்தில் வென்றுவிடும்
கோணங்களோ உன் பக்கத்திலே ...
பாதியில் விட்டுச்செல்ல
கோழையல்ல நீ ...
பண்பும் படிப்பும் பெற்றவன்,
அறிவும் ஆற்றலும் கொண்ட ஆண்மகனல்லவா நீ ...
பட்டுணர்ந்த பகுத்தறிவாளன்
அல்லாவா நீ ...
தடைகளை தகர்த்தெறியாமல் தயக்கங்கள் மட்டுமிங்கேனோ...!
வலிகளில்லா வாழ்க்கை
செங்குருதி பீறிற்று
புடை நரம்பில் முறுக்கேறி
அண்டம் அறிய அலறலில்
அவளில்லா தவிப்பிலலைகிறேன்..
அழகு மயிலில் ஆணழகெனினும்
இவளினழகில் அடங்கிப்போனோனை
பார்ப்பவன் பைத்தியக்காரனென்றான்,
பேசியவன் பேதகனென்றான்...
கூக்குரலிட்டும் கைசைகையிட்டும்
வாவென்றாலும் வராத கல்நெஞ்சமோ அல்ல இவள் கட்டுப்பட்ட நெஞ்சமோ...
அழகாய் மண்ணில் பிறந்து
ஆண்டவன் விதிப்படி நகர்ந்து ...
இல்லம் விட்டு,
ஈன்றோருக்கு
உறுதுணையாய் இருக்கும் வயதில்,
ஊரார் விட்டு, வாங்கிய கடனின் வட்டி
எல்லைமீறி போனதாலே,
ஏளனம்தாண்டி எதிர்கால
ஐயம்கொண்டு உழைக்கின்றோம்..
ஒய்யாரமாய் ஆளும் கல்லுளிமங்கன் நசுக்கிக்கொண்டே இருந்தாலும்,
உழைக்கும் வர்க்கம் உழைத்து கொட்ட,
ஒருமணிநேரம் ஒரு ரூபாய்
கணக்கில் முதலாளியாகிறான்,
உழைப்பவன் ஊமையாகிப்போவதனாலே ஏமாளியாகிறான்..
கோபம் எனக்குப் பிடிக்காததும்,
என்னில் மிகப் பிடித்த ஒன்றும்....
என் வார்த்தைகளை புரிந்து
கொள்பவர்களுக்கு என்னை
புரிந்து கொள்வது கடினம்
அல்ல...
மறதியால் நான் பெருமிதம் கொள்கிறேன் ...
மறவாது மரத்துப்போன
இதயமெல்லாம் மரித்து
போகும் மத்தியில், மறதியால்
நான் பெருமிதம் கொள்கிறேன் ...
சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டால்
அதில் சிங்கார நடைபோட்டால்
பல்லெல்லாம் இளிச்சென்றும்
உள்ளம் மட்டும் இகழ்ச்சியென்றும்
வெறும் வார்த்தையால் வாங்க போங்க
என்பதெல்லாம் மரியாதையாம்...
மானம் கெட்ட மடக்கூட்டங்களே,
மண்டியிட்டாலும் தன் மானம்
இழக்காத பலரில் ஒருவன்...
நானாக தான் நான் இருப்பேன்..
அதனால் பலரை இ
நிசப்தத்தின் எதிரொலிகளை
மௌனம் செவ்வியெடுத்த போது காற்று அதிர்ந்து கொண்டது
நிஷ்டையின் மூழ்கிய திணறலை விடுவிக்கும் போது சுவாசம் மட்டும் அங்கு எஞ்சியிருந்தது
அங்குமிங்கும்
எழுந்தமானமாக வரைந்த
இரேகைகளுக்குள்
நிரலிட்ட நரம்புகளில் அசையும் உதிரிகளை அள்ளி
இறக்கை செய்கிறேன்
வலசையைப் போல
மீப்பெரும் அமைதிக்குள்
தலை அமிழ்ந்தப் பற்றிய
அந்த நீண்ட விரல்களொத்த புல்லாங்குழல்களுக்குள்
நெகிழ்ந்து இசைக்கிறேன்
சரணாலயத்தை சுமக்கும்
பேரொளித் துகள்கள் சிதறியிருந்த அடிவாரத்தில் தான் அன்று செவிகளைக் களைந்திருந்தேன்
கீச்சொலிகளால் அலங்கரித்துக்கிடந்த அடவியில் நானும் மீச்சிறு
குரலாய் ஒலித்துக்கொண்
இளமை இசையில் இசைக்கிறது காமம் என்னை
வயதின் வாய்பிழையால்
உச்சறிக்க தடுமாற்றம் - மறு
உயிர் புகுந்தாற்போல் உணர்விறக்கம்
தனியாக காத்திருக்கிறேன்
துணையானவளே - நீ
எங்கே இருக்கிறாய்
சட்டம்மிட்டு தன்னிலை உயர்த்திய
சகுனி ஒருவனாலே இப்படி ஆனபோதும்,
நெஞ்சில் துளி உறுத்தலின்றி ஒருவனால் நகைக்க முடியுமெனில்,
ஆதிக்கம் அகம் குலைந்து
செம்மையோ இல்லாமலே போகும்...
இளைஞன் நெஞ்சில் பயமென்பதே இல்லையேல்,
எட்டுத் திசையும் எதிர்ப்பு கூட்டங்கள்
ஆகுமெனின்,
உன்னால் என்னால் அல்லாது நம்மால் என்றுணர்கையில்
சரித்திரம் ஒன்று பிறக்கும்...
நாளைய தேசம் நம் கையில்...
நான் யாறென்ற போதிலும்
நான் என்று இருக்கும்பட்சத்தில்,
த்தான் என்ற கர்வம் என்னுள் இல்லையென எண்ணினாலும்,
எனக்குள்ளும் உண்டு குறைகள் கூற ...
குறைகளற்ற மாந்தர்களும் இவுலகில் இல்லையோ ..?
மதிகெட்டு சுடும் வார்த்தைகளால் பிறர் மனம் தகர்த்தேனோ...! அல்லது மனமுடைந்து தான் போனேனோ...!
பொருளற்ற வீண்விவாதம் ஒலிக்கையில் செவிகள் உண்டு, குரல் வசனம் இல்லை..
திக்கெட்டும் சுமைகள் வந்து கொட்டும்,
பட்டும் திருந்தா நெஞ்சன் என சூட்டுவார் பெயர் ..
அடங்கா நெஞ்சனின் அடக்கிய துயர், பொங்கி பொழிகிறதே புன்னகைகளாய்..
உங்கள் இருவிழிகளின் எதிரே..