பெண் சர்ப்பம்

பல வேளை மகிழ்ந்தாய்
சில வேளை நெகிழ்ந்தாய்
பாசத்த்தில் பலபேரை
எனக்காக உமிழ்ந்தாய்
உனக்காக மகிழ்ந்தேன்
உனக்காக நெகிழ்ந்தேன்
உன்பால் உனதன்பால்
வந்து பூத்த காதலின் பால்
என்னை உன்னோடு முகிழ்த்தேன் ....
நீ நானாக நான் நீயாக
எனதெல்லாம் உனதாக
நாம் நாமானோம்
வானம் நமதானது
பூமி தோழில் சிறகானது ....
அழகாய் அருமையாய்
ஒருமையான எமதிருமை
வெகுவிரைவில் இன்று
உன்னால் என்னில்
மீண்டும் ஒருமையானதே
நெஞ்சம் வெறுமையானதே
எல்லாமே கருமையானதே
என் வாழ்வும் சிறுமையானதே

நான் அனலிலிட்ட புழுவானேன்
சூழ்ந்தோர்க்கு வழுவானேன் .
பெண்ணே ! ஆண்கள்
என்ன கிள்ளுக் கீரையா?
இல்லை உபயோகித்து
உமிழும் கறிவேப்பிலையா ..
வேளை வரும் போது தன்
வேலையைச் சரிபடச் செய்யும்
பெண் சர்ப்பத்தைத் தான்
அறியாமல் நான்
இத்தனை நாளும்
பாலூட்டி வளர்த்தேனா ?


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (4-Jun-18, 12:43 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : pen sarppam
பார்வை : 779

மேலே