கடைசி துளி விஷம்

கடைசி துளி விஷம்...
ஆதங்கம் தணிய
வழித்தெடுத்து நாக்கின் மேல் தடவிக்கொண்டாயிற்று...
இன்னும் சில நிமிடங்கள் நீடிக்கலாம்...
அதற்குள் ஒரே திரையில் பல காட்சிகள் போல்
அத்தனையும் விஸ்தீரிக்கிறது கண்முன்...
புதைத்த வலிமூட்டைகளில் இருந்து
ஒவ்வொன்றாய் உருவி எடுத்து அழலாம் தான்...
ஒருமுறையாவது ஆழ புதைந்த கோபத்தை
பெருங்குரலெடுத்து கர்ஜிக்க வேண்டுமென தோன்ற
கையில் மாட்டியதெல்லாம் சுவரில் வீசப்பட்டு
இனி உடைப்பதற்கு ஏதுமில்லை என்ற பொழுது
மயிர்கற்றைகள் சூழ்ந்த மண்டையோட்டை
நங்கென்று ஒருமுறை இடித்ததில் கொஞ்சம் நிம்மதி...
உடல் முழுதும் ரணம் குரூரத்தோடு சுகித்தது..
கல் பட்டால் வலிக்கும் கண் பட்டால் வலிக்குமென
பொத்தி வளர்த்த உடம்பிற்கு இன்னுமின்னும் வலி
வேண்டுமென்று துடிக்க மயிற்றை பிய்த்து
உடலை கீறி கண்கள் சிவக்க ஆர்ப்பரித்தும் ஆயிற்று...
இன்னும் வரவில்லை இந்த மரணம்
விஷம் வீரியம் தானே சந்தேகம் எழ
சிதைந்துகிடந்தவைகளின் நடுவில் சிக்கியது விஷபாட்டில்..
காலாவதி ஆகவில்லை நிச்சயம் இவ்வுடலை காலாவதியாக்கும்...
எதன்மீதும் வராத நம்பிக்கை மரணத்தின் மீது வந்தது..
இந்த முடிவு இன்று எடுக்கப்பட்டதில்லை..
பல ஆண்டுகளாக சின்ன சின்ன முயற்சிகள்
பயத்தினூடே செய்தவை பலிக்காமலே போனது..
எல்லை கடந்த வலிக்கு பயம் தெரியாதோ...
கடைசி வினாடிகள் யார்மீதும் பழிசுமத்த எண்ணமில்லை
கொஞ்சமேனும் அன்பை அனுபவித்திருக்கலாம்...
பெருமூச்சொன்றை விட்டு ஏக்கத்தை காற்றில் கலந்து
இளைப்பாற ஓர் இடத்தை அடைந்து கண்மூடியாயிற்று....

எழுதியவர் : ராணிகோவிந் (13-Jun-18, 12:27 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
Tanglish : kadasi thuli visham
பார்வை : 79

மேலே