முத்தங்களில்
அன்பே
அறைத்து வைத்த மருதாணி
சிவந்ததை கண்ட கண்கள் -- மறைத்து
வைத்திருக்கும் நாணத்தினை
காண அலைகின்றது......
விரல்களே வழிவிடுவீர்களா???
விழியில் தேங்கும்
வெட்கத்தின் மொழிகளை
மொத்தமாக நான்
மொழிபெயர்க்க வேண்டும்
என் முத்தங்களில்...!!