நடக்கப் பழகு

நகரம் முதல் நாள்

முன்னாடி யாரடா
கையில் குடுவாயோடு
தண்ணீர் குடுவை தான் -அமிலம் அல்ல

பின்னாடி யாரடா கண்களில்
வன்மத்தோடு
அவன் பார்வையே அப்படித்தான்

பக்கவாட்டில் எவனோ உரசும் படி நடக்க
நொடிகளில் போய்வந்த உயிர்

கழுத்திலென்ன துணி
பொன்நகையை மறைக்கவே-
புன்னகை எங்கே பறிபோனது

கண்களிலென்ன பயம்
காமவெறியர்கள் - ஜாக்கிரதை

எழுதியவர் : கோப்பெருந்தேவி (14-Jun-18, 8:44 am)
சேர்த்தது : கோப்பெருந்தேவி
Tanglish : nadakkap pazhaku
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே