திருக்குறள்

தமிழ் மொழி தந்தான் நமக்கு
தனித்தமிழ் குடமுனி அகத்தியன்
குறுகிய ஈரடி குறட்பாவில்
மறைகளின் சாரம் நமக்களித்தான்
திருக்குறளை வள்ளுவ மாமுனி
அதில் அவனியில் நம் வாழ்க்கைக்கு
இல்லாதது ஏதுமிலை,முப்பாலை
ஓதுமதில்,இதை கசடற கற்போமாயின்
இம்மைக்கும் மறுமைக்கும் இதுவே நமக்கு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jun-18, 9:19 am)
Tanglish : thirukural
பார்வை : 50

மேலே