மனதிற்குள் மழை

மின்னல்கள் உரசியது
இடியின் நாதம்
சலனமற்று கிடந்த
மனதின் மெளனத்தை
கீறியது...
வீசிடும் வளி
உணர்வுகளை
உருவிப்போக
எத்தனித்தது;
பெருமழையின்
ஒவ்வொரு துளியும்
நின் முகம் தரித்து
ஊசிபோல் பாய்ந்தது...
இவையனைத்தும்
சுட்டெரிக்கும் வெயிலில்
ஆற்றங்கரையில்
ஒற்றைபாறையின் மேல்
தோல்விகளை தாங்கி
உன் நினைவுகளுடன்
நின்ற என்னுள்...
நீ என்செய்கிறாய்?
அங்கே
உன்னுள்ளும்
என் நினைவு
மழை பெய்ததா...

எழுதியவர் : சுரேஷ் குமார் (17-Jun-18, 11:20 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : MANATHIRKKUL mazhai
பார்வை : 502

மேலே