விலை மாது

பூவும் நானும்
ஒரு ஜாதி
யாரோ பறிப்பார்கள்...
யாரோ விற்பார்கள் ...
வாசம் வீசும் வரை
அவர்கள் வசம் நான்.
பூக்களை கொண்டாடும் மக்கள்
என்னை மட்டும் ஏன் கொண்டாடுவதில்லை
எவரை திட்டுவதாய் இருந்தாலும்
என் பெயர் வைத்தே ...திட்டுகிறார்கள் .
மௌனமாய் செல்வதை தவிர ...
வழியேதும் இல்லை எனக்கு
ஏன் என்றால்
பூக்களும் நானும்
மௌனம் மட்டுமே
பேசுகிறோம் .

எழுதியவர் : karthikjeeva (19-Jun-18, 11:52 am)
Tanglish : vilai maathu
பார்வை : 127

மேலே