எவ்வகை மாயமோ

எவ்வகை மாயமோ நீ?!!
மழை பொழிந்த வானை அலங்கரிக்கும்
வானவில் மாயமோ?
மெல்லிய மலருக்கு தேனியை ஈர்த்திழுக்கும்
தித்திப்பு மாயமோ?
பாறையாயினும் துளைத்தெழும்பும்
அவ்விதையின் மர்ம சூட்சமமோ?
பார் கடலையே தன்னுள் அடக்கிக் கொள்ளும்
சங்கின் அற்புதமோ?
நள்ளிரவில் ஒளி கொடுக்கும் மதியோ?
இல்லை....பரந்த​ கருநீலத்தை அலங்கரிக்கும் எண்ணிலடங்கா விண்மீன்களோ?
அழகிற்கு அழகு சேர்க்கும் ஒப்பனையோ?
இல்லை....அவ்வழகை வர்ணிக்கும் கவிஞனின் சொல்வண்ணமோ?
அல்லது.....இப்படி என் மதியை கலங்கடிக்கும் இக்குழப்பமோ நீ?
பதில் கிடைக்குமென காத்திருக்கிறேன் நாட்காட்டி கிழித்து......

எழுதியவர் : பூர்ணி கவி (19-Jun-18, 11:31 am)
Tanglish : evvakai maayamo
பார்வை : 83

மேலே