உன் விழிகளில் தோற்றுபோகுதடி என் விழிகள் 555

ப்ரியமானவளே...

காதலை மண்ணைப்பார்த்து
சொல்லாதே...

கண்ணை பார்த்து
சொல்லுவிடு என்கிறாய்...

உன் விழிகளின் வீச்சில் என் விழிகள்
பலமுறை தோற்றுபோனதடி...

காலம் தொட்டு வாழும்
காதலை...

நானும் சொல்கிறேன்
ஒரு காகிதத்தில்...

இது வெறும் காகிதமல்ல
என் காதல் காவியம்...

அழகான என் காதலை அழகாகவும்
ஆழமாகவும் சொல்ல தெரியவில்லை...

"உனக்கும் எனக்கும் குழந்தை
பிறந்தால் எப்படி இருக்கும்"...

என் காதலை புரிந்துகொண்டால்
என்னை ஏற்றுக்கொள்...

இல்லையேல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Jun-18, 4:01 pm)
பார்வை : 331

மேலே