வேகம்

வீதியில் ஒற்றைச் செருப்பு,
விதி முடிந்தவன்
விட்டுச்சென்ற மிச்சம்..

மழை அழிக்கும்
இரத்தக் கறை,
விபத்தின் அடையாளத்தை
அழிக்கும்
இயற்கையின் கரங்கள்..

ஆனாலும் மனிதன் செல்கிறான்
அதி வேகமாக-
ஆபத்து வராதென்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jul-18, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vegam
பார்வை : 109

மேலே