புதிய பாதை காட்டும் கவிதை
"ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் "
கண்ணதாசன் எனும் மாகவிஞன்
எழுதினான்
சவுக்குடனும்
சௌந்தர விஸ்வத்துடனும்
திரையில் பாடிக் காட்டினான்
ஒரு செம்மல்
அதை
மூல மந்திரமாக
உள்ளே உருப்போடுங்கள்
உதட்டினால்
உச்சாடனம் செய்யுங்கள்
சவுக்குடன் சிந்தியுங்கள்
ஒரு சாட்டையுடன்
எழுந்திருங்கள்
புரட்சி புதிய திசை நோக்கி
புறப்பட்டு விடும்
----கவின் சாரலன்