நகைச்சுவை உரையாடல்
இருளும் ஒளியும் சந்தித்த வேளையில்
ஒளி.. சரிதான் போடா
இருள் .. உனக்கு வெட்கமே இல்லை
ஒளி.. . உலகம் என்னால் இயங்குகிறது தெரியாதா /
இருள் .... உலகம் என்னால் உறங்குகிறது பார்க்கலையா/
ஒளி ...இருளில் எத்தனை களவுகள் வீடுகளை பாங்குகளை உடைத்து , ஏன் நீதான் பார்க்க மாட்டாயே
எது நடந்தாலும் நீ கண்ணை இறுக்கி மூடிக் கொள்வாயே
இருள் .. நீ உலவும் நேரத்தில் மட்டும் என்னவாம் . பட்டப்பகலில் கொள்ளை, அடிதடி, சண்டையோ சண்டை, துப்பாக்கி சூடு
இன்னும் சொல்ல வாய் கூசுகிறது
ஒளி ...நான் அவற்றை எல்லாம் மக்கள் பார்வைக்கு எடுக்க கொடுக்கிறேன் மிச்சம் மீதி அவர்கள் கையில்
மனிதன் பண்புடன் வாழத்தான் நான் ஒளியாய் இருக்கிறேன் ,இது அவனுக்கே புரியவில்லை உனக்கு எப்படி புரியும் /
இருள்.... மச்சான்/ மனிதனின் போக்கே சரியாயில்லை அதான் நான் கண்ணை இறுக்கி மூடிக் கிட்டு இருக்கேன்
உன் விதி அது நான் என்ன செய்ய முடியும் /
ஒளி ....பேச்சை மாத்தாதே நீ லாயக்கில்லாதவன் வாயை மூடு
இருள் ... உன்னை சொல்லி பயன் இல்லை மச்சான் எல்லாம் அவன் செயல்
ஒளி ...அது சரி உலகம் எக்கேடு கெட்டால் உனக்கென்ன நீ இறுக்கி கண்ணை மூடு
இருள் .... கோபப்படாதே மச்சான் எனது மவுனம், பொறுமை என்பதை .புரிந்து கொள் சரி சரி நேரம் காத்துக்கிடக்கு வரேன்
மீண்டும் சந்திப்போம் good night