உன் நினைவு

மரிக்கின்ற வேளை
உன் நினைவை
மறைக்க வேண்டும்

உதிர்கின்ற வேளை
உன் நிழலில்
உதிரம் சிந்த வேண்டும்

ஏக்கம் கொள்ளும் வேளை
உன் எண்ணங்களை
ஏந்திட வேண்டும்

யாமம் வருடும் வேளை
உன் நினைவுகளுடன்
யாகம் சேர்ந்திட வேண்டும்

காதல் வந்திடும் வேளை
உன் நினைவுடன்
காலம் போக்கிட வேண்டும்

தனிமை இருக்கும் வேளை
உன் கனவுகளுடன்
துயில் கொள்ள வேண்டும்

நீரற்ற மீன்கள் போல்
உன் நினைவில்
நாளும் துடித்திட வேண்டும்

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (16-Jul-18, 2:16 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : un ninaivu
பார்வை : 136

மேலே