ஹலோ......!!!🎶🎵

🎶🎵🎶🎵🎶🎵🎶🎵
என் அலைபேசி ஒலி எழுப்பினாலே
என்னை அழைப்பது
அவள் தானோ என்ற
எண்ணம் என்னையும்
அறியாமல் என்னுள்
எழுந்து மறையும்
அழைப்பை ஏற்றவுடன்
அவள் சொல்லும்
ஹலோ....என்ற வார்த்தைக்கே
மீண்டும் மீண்டும்
அழைக்கத் தோன்றும் அவளை...
நான் பேசத் தொடங்கும் முன்னே
என்னை கொஞ்சி மகிழ்வாள்
நான் கிறங்கி விழுவேன்
அவள் நினைவில்
சில நேரம் ஏனோ
எங்களின் அலைபேசியும்
மௌன மொழி பேசும்
எத்தனை நாள்
மீண்டும் மீண்டும்
பேசினாலும்
எங்கள் இருவருக்குமே
மனம் வந்ததே இல்லை
இணைப்பை துண்டிக்க.....
இணைப்ப துண்டிக்கும்
போது ஒவ்வொரு நாளும்
இருவருமே துடித்துப் போவோம்
காதல் கூட கூட நெருக்கம்
தானே கேட்க்கும் நெஞ்சம்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-Jul-18, 10:08 pm)
பார்வை : 60

மேலே