மகிழ்ச்சிக்கிடையில் அழுகை


•புரியாத புதிர்…

தொலைவில் சிலவும்
அருகில் சிலவும்
தீபங்கள் ஊர்வலம் சென்றன
இடையாடும் பெண்ணின் அழகு போல!
மனதில் என்னவோ
ஒரு நினைவு
தோன்றி மறைந்தது.
மிதந்து செல்லும்
தீப ஊர்வலத்தை
மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.
மகிழ்ச்சிக்கிடையில்
அழுகை வந்தது
ஏனோ எனக்கே புரியவில்லை!

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (17-Aug-11, 7:31 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 390

மேலே