வளைந்து கொடாதா நிலவு
கருங்கூந்தல் போர்வைக்குள்
அழகாய் வளர்ந்தும் தேய்ந்தும்
மலைகளோடும் ரயிலோடும் அனலாய் போட்டியிடும் குளிர்திங்களே!
அதீத ஒலிப்பதிவு போல்
மனங்களை அறுதியிடல் செய்யும்
வெண்ணிலவே !
வெய்யோன் கதிர் வீச மதியுடன் விலகும் மதியே!
இரவை ஆளும் சிறும்சுடரே!
உன்போல தான் நானும் வாழ விழைகிறேன்!
இப்படிக்கு,
வளைந்து கொடாத பெண்!