காதல் மலர்கள்

மொட்டுகளாய் இருந்தவரை
செடிதான் உன் விலாசம்
சிரித்து விரிந்து மலர்ந்தபொழுது
செடிக்கோ நீ விலாசம் .

மவுனமாய் மலர்ந்தாலும்
வாசத்தை கட்டவிழ்த்ததால்
நாசிவழி போதையேத்தி ,
உன்னை வலய வரும்
வண்டுகளின் ரீங்காரம்
செவிகளை சிறைப்படுத்தி ,
வண்ண ஒளி உன் இதழ்கள் சிந்த
என் விழித்திரையில் ஊடுருவி
மனத்திரையில் மாட்டிக்கொண்ட
காட்சிகள்.
புலனடக்கம் போதவில்லை
எனக்குள்ளே உன் ஆக்ரமிப்பு.

எழுதியவர் : (25-Jul-18, 12:52 pm)
சேர்த்தது : சகி
Tanglish : kaadhal malarkal
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே