என் நினைவே நீ தான் சுகம்

எனது மனதில் அமர்ந்திருக்கும்
உன் நினைவோடும்....
என் விழியில் நிறைந்திருக்கும்
உன் விழியோடும்
கடந்து போகும் எனது
வாழ்வின் நிமிடங்கள்
களங்கம் உள்ளது நிலா முகம்
அது கலைந்து போவதால்
களங்கம் அற்றது உன் முகம்
அது நிலைத்து நிற்பதால்
அழகிப் போட்டியில் அந்தப்
பெளர்ணமியை விட
நீ தான் முதலிடம்
உன் நினைவுகளோடு
கழியும் கொடுமையான
ராத்திரியும் கூட
எனக்கு இனிமையானது தான்!
ஆக்கம்
அஷ்ரப் அலி