அவன் பார்வை ஒரு மாயம்
உன் பார்வை என் மீது பட்டதன்பே
என் பார்வையுடன் கலந்து என்மேல்
பேரொளியாய் பரவி நின்றது ஏனோ-அது
ஓர் மாயம் செய்து என்னை மயக்கியதே !
உன் பார்வையில் நான் குற்றம் சொல்லவில்லை
அதில் சூதும் கள்ளமும் ஏதுமில்லை -ஆனால்
காதலனே சொல்வேன் அதில் கண்டேனே
நான் ஓர் மாயம் .............
உன் பார்வை பார்வையாய் ஒருபக்கம்
மறுபக்கம் நான் அதனை எனைத்தீண்டும்
கரங்களாய் அல்லவோ கண்டேன் நான்
என் மேனியில் மெல்ல மெல்ல
அம்மம்மா அதை எப்படிச் சொல்வேன்
என் கூந்தலைக் மெல்ல கோதி, அதில்
வீசும் மல்லிகைப்பூ மணம் முகர்ந்து
என் கன்னங்களில் முத்தமிட கண்டேனே;
உந்தன் பார்வையே கரங்களாய்..........
குழலோசையாய் மாறி என் உள்ளத்தை தொட்டு
கண்ணன் குழலோசைக்கு மயங்கிய
ராதையாய் என்னை மயக்கியதே -இப்படியே
அங்கமெல்லாம் அணுஅணுவாய் பற்றி
அணைத்து என் உள்ளத்தில் காமத்தீ
ஏற்றியதுபோல் கண்டேனே, அது என்னை
உன்னை நாடி அடைந்து மனம் குளிர
சொல்லுவது போலும் கண்டேனே!
என்னென்பேனடா, என்னவனே உந்தன்
கண்களின் மாயம், அதில் உன் பார்வைத்தரும்
வினோதம் அதில் நான் காணும் உந்தன்
அணைக்கும் காதல் கணைகள் இல்லை கரங்கள்
இப்படி பார்வை கரங்களாய் உன் பார்வை
காதல் கரங்களாய் கட்டிபோட்டுவிட்டதே
இது மாயம், பெரு மாயமே என்பேன் நான்.
வேறென்ன சொல்வேன் இதை நீயே சொல்லு