தந்தை

கருவறையில் நாம் குடியேற விதைத்தான் விதை
அன்னையவள் ஈன்றெடுத்தால் ஓர் அழகிய குழந்தை
தினந்தோறும் நாம் தூங்க செப்பினான் ஓர் கதை
நாம் அழாமல் இருக்க, செய்தான், பல வித்தை
பள்ளிக்கு அனுப்பி , காட்டினான் நல்ல பாதை
ஒழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தான் நன்நடத்தை
மனஅமைதிக்கு போதித்தான் பரத்தை
காலத்தில் தேர்ந்தெடுத்தான் நமக்கு ஒரு தேவதை
அதனால் உயர்ந்தது சமூகத்தில் நம் மரியாதை

தாய் காட்டி தந்தை
தந்தை காட்டி குரு
குரு காட்டி தெய்வம்
வரிசையில் இரண்டானவன் ,
ஆனால் வம்சத்திற்க்கு ஆதிமுதலானவன் ,
அவனே நம் தந்தை
மூச்சுள்ளவரை நினைப்போம் , மூச்சாக நினைப்போம் ,முடிசூடிவைப்போம்

எழுதியவர் : Venkatram (29-Jul-18, 9:00 pm)
சேர்த்தது : Venkatram
Tanglish : thanthai
பார்வை : 73

மேலே