அவள் , நான்,என் பேனா

அவளை பார்த்தேன்
அசரவைத்தது என்னை
அவள் அழகு -அழகு
ரசிப்பதற்கே என்ற
நினைப்பில் அந்த
அழகில் என் எண்ணம்
ஆழ்ந்திருந்தபோது ,ஐயோ
இப்படியே இருந்தால்
இவள் அழகை கவிதையில்
வடிவுதருவதெப்போது ...சரி
எழுதலாம் இப்போது
என்று நினைத்து
பேனாவை திறந்து
காகிதத்தில் அழுத்த
எழுத மறுத்தது பேனா
என்ன பேனா எழுத மறுப்பதா!!!
ஆம், பேனா பேசியது
'இத்தனை நாழி நீங்கள்
பார்த்து மகிழ்ந்து திளைத்த
அவள் அழகை இப்போதுதான்
நான் பார்க்கத்தொடங்க.......
என்னை எழுது என்றால் எப்படி...
கொஞ்சம் பொறுங்கள் .....
என்றது.........அதிர்ந்து போனேன்

இப்போது பேனா சொன்னது
'நான் ரெடி நீங்கள்...............'

அவளைக்காணவில்லை இப்போது .....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Aug-18, 2:15 pm)
பார்வை : 92

மேலே