வீதியில் ஓர் ஓவியம்


வித்தகன் வரைந்தான்
வீதியில் ஓர் ஓவியம்

சுற்றி இருந்து
மக்கள் ரசித்தனர்

இன்னும் முழுதும்
முடிக்கவில்லை
எங்கிருந்தோ வந்தது
மழை
மக்கள் கலைந்தோடினர்
சித்திரம் கரைந்தோடியது

சில்லறை சன்மானம்
சித்றிக் கிடந்தது
அவன் எதையும்
தொடவில்லை

முடிக்கும் முன்னே
கரைந்த சோகம்
நெஞ்சில் கனத்தது

கலை நெஞ்சில்
ஓவியம் வரைகிறது
பசி வயிற்றில்
ஓவியம் வரைகிறது

நாளை இன்னொரு வீதி
வெய்யிலோ மழையோ
யார் அறிவார்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-11, 11:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 293

மேலே