கடவுளின் நிறம் என்ன ?

மனம் மாறாத மனிதர்கள்,நிறம் மாறி என்ன பயன்.
ஆயிரம் கற்களை உடைத்த போது வந்த சோகமும் கோபமும்,
ஒருவரின் உயிர் பறிக்கும் போது வரவில்லையே!
உணவு பண்டங்களா,கடவுள் என்பது,இடத்திற்கு இடம் வேறுபட,
அது இதயத்தின் நான்கு கோணங்களிலும்,
நான்கு திசைகளிலும் பறந்து நிற்பவை,ஒன்றாய் தெரிபவை.
இது தனக்காக கடவுள் செய்த யுத்தமல்ல,மனிதன்
தன்னை கடவுளாக்க செய்த யுத்தம்.
தோற்றது மதம் அல்ல,மனித இனம்...

எழுதியவர் : ராகுல் தங்கவேல் (17-Aug-11, 11:21 pm)
சேர்த்தது : Ragul Thangavel
பார்வை : 328

மேலே