நமக்கினி பயமேது - கெளளிபந்து

கோபால கிருஷ்ண பாரதி இயற்றியது.

பல்லவி:

நமக்கினி பயமேது - தில்லை – நடராசனிருக்கும் போது

அநுபல்லவி

மார்க்கண்டருக்காக மறலியை உதைத்திட்ட
மான் மழு வேந்தும் மகாதேவனிருக்க (நமக்கினி)

சரணம்

இம்மை மறுமை முதல் யாவுக்கும் பரமான
சின்மயானந்த ரூபச் சிவபெருமானிருக்க (நமக்கினி)

அரியயனமரரும் ஆலங்கண்டஞ்சமுன்
பரிவுடனே காத்த பரம சிவனிருக்க (நமக்கினி)

திருவிக்கிரமனாய் வரும் திண்மாயன் மமதையை
விரிவுகங்காளனாகி விலக்கும் பரனிருக்க (நமக்கினி)

ஆதிசேடனுமாலும் அலரோன் இலக்குமியும்
காதலாய் தவஞ்செய்யக் களித்த பரனிருக்க (நமக்கினி)

இரணியனால் வெறி கொண்ட நரசிம்மனை
தரணியில் ரட்சித்த சங்கரனிருக்கவே (நமக்கினி)

TAMIL OLD--Namakkini payam ethu(vMv)--JEGATHALA PIRATHABAN என்று யு ட்யூபில் பதிந்து 1944 ல் வெளிவந்த ஜெகதல பிரதாபன் என்ற திரைப்படத்தில் P.U.சின்னப்பா பல்லவி மட்டும் பாடி, ஸ்வரப் பிரஸ்தாரம் செய்ய, பேபி கமலா ஆடுவதைக் காணலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-18, 12:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 150

சிறந்த கட்டுரைகள்

மேலே